இசையமைப்பாளர் இளையராஜா இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஆறிலிருந்து அறுபது வரை இவரது இசையை ரசித்து கேட்காதவர்கள் எவரும் இல்லை.அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து 1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இளையராஜா.இவர் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.இவருக்கு 2010 ஆம் ஆண்டு உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்றுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவரது மகன் யுவன் சங்கர் ராஜா,கார்த்திக் மற்றும் மகள் பவதாரிணி மற்றும் தம்பி கங்கை அமரன் ,அவரது மகன்கள் எல்லோரும் சினிமாவில் பிரபலங்களாக வலம் வருகின்றனர். இவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் தந்தையை போல பெரிய இசையமைப்பாளராக தமிழ் சினிமாவை வலம் வருகிறார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இளையராஜா இவர் இசையமைத்த பல பாடல்கள் பெரும் ஹிட் அடித்துள்ளது.தற்போதும் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.அண்மையில் இவர் இசையில் மாமனிதன் படம் வெளியாகியது.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்கும் விடுதலை படத்திற்கு இசையமைத்துள்ளார்.நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது,இந்த நிகழ்வில் இளையராஜா பேசிக்கொண்டிருக்கும் பொழுது ரசிகர்கள் கத்தியதால் கத்தாதே,மைக்கை கொடுத்துட்டு போயிடுவேன் என கடுப்பாகி ரசிகர்களை மேடையில் ஒருமையில் திட்டியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகவே இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி அவரை திட்டி வருகின்றனர்.
Embed video credits : THI CINEMAS