The Indian Times

இந்த காரணத்தினால்தான் பாண்டியன் ஸ்டோரில் இருந்து முல்லை விலகினாராம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர்.இந்த தொடரில் மக்களிடம் மிக வரவேற்பினை பெற்ற கதாபாத்திரம் தான் முல்லை.இந்த கதாபாத்திரத்தில் முன்னதாக விஜே சித்ரா நடித்து வந்தார்.இவருக்கு மிக பெரும் புகழ் இந்த நாடகத்தில் நடித்ததற்கு கிடைத்தது.இவர் பின்னர் தற்கொலை செய்துகொண்டு இறந்த பின்னர்.இவரின் இடத்தினை நிரப்புவதற்கு சரியான பொருத்தமான ஆளை தேடிவந்தனர்.

Advertisement

அந்த நேரத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு காவ்யா பொருத்தமாக இருப்பதால் அவரை தேர்ந்தெடுத்தனர்.காவ்யா தற்போது பாண்டியன் ஸ்டோர் நாடகத்தில் முல்லையாக நடித்து அசத்தி வருகிறார்.இவர் முன்னதாக மாடலிங் துறையில் இருந்தார்,பின்னர் சினிமாவின் மேல் கொண்ட ஆசையால் முதலில் நாடகத்தில் இருந்து தொடங்கலாம் என வாய்ப்பு தேடினார்,அப்பொழுதுதான் பாரதி கண்ணம்மா சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.இந்த சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார் காவ்யா.

இந்த தொடரில் நடித்து இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,தற்போது இந்த நாடகத்தில் இருந்து இவர் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து விசாரித்த பொழுது,காவ்யாவுக்கு பட வாய்ப்புகள் வருவதாகவும் அதில் நடிப்பதற்காக இவர் சீரியலில் இருந்து விலக உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.இதனால் முல்லை ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in