தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்றியவர் ராபர்ட் மாஸ்டர்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் இவர்.மேலும் எம்ஜி ஆர் ரஜினி கமல் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் கதாநாயகனாக கால் தடம் பதித்துள்ளார்.சினிமாவை விட்டு இவர் தற்போது சில ஆண்டுகளாக விலகி இருக்கிறார்.பட வாய்ப்புகள் ஏதும் சரிவர அமையாததால் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார்
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இதில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்து இழந்த அந்தஸ்தினை திரும்ப பெற முடிவு செய்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.தற்போது வீட்டுக்குள் சுறுசுறுப்பாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.எந்த டாஸ்க் வந்தாலும் சும்மா அதிரடியாக பட்டையை கிளப்பி வருகிறார் ராபர்ட் மாஸ்டர்.தற்போது பிக் பாஸில் போட்டியாளர்கள் தங்களது கதைகளை கூறும் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது
இந்த போட்டியில் ராபர்ட் தனது கதையை கூறியுள்ளார்,காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் ,பின்னர் இருவரும் மனக்கசப்பு காரணமாக புரிந்துகொண்டோம் .என் மகளுக்கு நான் அப்பா என்பது தெரியுமா இல்லையா என்பதே எனக்கு தெரியாது.என் முதல் மனைவி மற்றொரு திருமணம் செய்துகொண்டார்.எனது குழந்தையை இரண்டு வயது வரை பார்த்துள்ளேன் ,பின்னர் 7 வயதில் எனது மனைவியுடன் ஸ்கூட்டரில் வரும் பொழுது அங்கிளுக்கு ஹாய் சொல்லு என எனது குழந்தையிடம் சொல்ல எனது குழந்தை அங்கிள் ஹாய் என கூறி சென்றது,இந்த நிகழ்ச்சி பிறகாவது அவளுக்கு நான் தான் அப்பா என்று சொல்லுங்கள் அதற்காகத்தான் வந்துள்ளேன் என கூறியுள்ளார்.