என் பையன் சிம்புக்காக தான் நான் அமெரிக்கா போறேன்..கண்ணீர் மல்க பேட்டியளித்த T.RAJENDAR

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட முன்னணி இயக்குனர் T.ராஜேந்தர். ,நடிகர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர்,பாடலாசிரியர் என பல அவதாரங்களை தமிழ் சினிமாவில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.சினிமா மீதுகொண்ட காதலினால் சினிமாவை கற்று ஒருதலை ராகம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இயக்குனராக நுழைந்தவர் இவர்.இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் கவனத்தினை ஒட்டுமொத்தமாக ஈர்த்தார்
ராஜேந்தர்.முதல் வெற்றியை தொடர்ந்து நம்பிக்கை வரவே படங்களை இயக்க தொடங்கிவிட்ட்டார் .இவருக்கு பெண்களை தொடாமல் நடிப்பவர் என்ற பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.அதுதான் இவரது பலமே.பின்னர் அரசியலில் இறங்கி அதன் ஆழத்தினையும் பார்த்தவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  செம்ம மாடர்ன் ஆக மாறிய சிவாங்கியின் கியூட்டான புகைப்படங்கள்

என் பையன் சிம்புக்காக தான் நான் அமெரிக்கா போறேன்..கண்ணீர் மல்க பேட்டியளித்த T.RAJENDAR 1

விளம்பரம்

இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை உள்ளது.இதில் மகன் சிலம்பரசன் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் நடிகர் ஆக உள்ளார்.இரண்டாவது மகன் குறளரசன் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார். T.ராஜேந்தர் அவர்களின் அடுக்கு மொழி வசனத்திற்கு இன்றளவுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.அதிலும் குறிப்பாக வாடா என் மச்சி வாழைக்காய் பஜ்ஜி என கூறிக்கொண்டு படத்தில் எதிரிகளை பந்தாடுவது எல்லாம் இவரால் மட்டும் முடிந்ததே.தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இந்நிலையில் டி ஆருக்கு வயிற்றில் ரத்த கசிவு இருப்பதை கண்டறிந்தனர் மருத்துவர்கள்.இவரது மகன் நடிகர் சிம்பு தந்தையை அமெரிக்கா சென்று மேல் சிகிச்சை மூலம் குணப்படுத்த உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  PUSHPA 2 டீசர் வெளியாகியது இதோ

என் பையன் சிம்புக்காக தான் நான் அமெரிக்கா போறேன்..கண்ணீர் மல்க பேட்டியளித்த T.RAJENDAR 2

விளம்பரம்

இந்நிலையில் ராஜேந்தர் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா கிளம்பினார்.விமான நிலைய வாசலில் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,என் மகன் சிலம்பரசன்,மகன் மட்டுமில்லை,நான் உருவாக்கிய என் சிசியன்.அப்பா உங்கள வெளிநாட்டுக்கு அழைச்சிட்டு போய் தான் சிகிச்சை அளிப்பேன் என கூறி என்னை கூட்டி செல்கிறார்,அவருக்காகத்தான் நான் வெளிநாடு செல்கிறேன்.இதற்காக வெந்து தணிந்து காடு படத்தின் ஆடியோ ரீலீஸை தள்ளி வச்சிட்டு,பத்து தல படத்தின் படப்பிடிப்பை தள்ளி வச்சிட்டு 12 நாளைக்கு மேல அமெரிக்கால போயி உக்காந்துட்டு,பெத்த தகப்பனுக்காகவும்,தாய்க்காகவும் உழைத்து கொண்டு இருப்பதை பார்க்கும்பொழுது ,அவன் வல்லவன் மட்டும் அல்ல நல்லவன்.அவருக்காக நான் பெருமை படுகிறேன் என தெரிவித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment