The Indian Times

வாரிசை துணிவு வசூலில் முந்திவிட்டதாமே? கேள்விக்கு அதிர்ச்சி பதில் அளித்த வாரிசு இயக்குனர் வம்சி

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி கமலுக்கு பின்பு அதிக ரசிகர்கள் கூட்டம் இருப்பது விஜய் மற்றும் அஜித்திற்கு தான்.அந்தளவுக்கு இருவரையும் அவர்களது ரசிகர்கள் நேசித்து வருகின்றனர்.இவர்களின் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அதன்படி இருவரின் சினிமா வாழ்க்கையிலும் தோல்விகள் மற்றும் வெற்றிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் படம் ஒரே நாளில் வெளியாகி உள்ளது.இதற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பி உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

கடந்த புதன்கிழமை அதிகாலை 1 மணி முதல் தமிழகம் மற்றும் உலகமெங்கும் துணிவு படம் திரையரங்குகளில் காட்சிகள் வெளியாகி உள்ளது.அதேபோல் தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள வாரிசு படமும் அதேநாள் அதிகாலை 4 மணி முதல் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது.ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படத்தினை கண்டு களித்து வருகின்றனர்.இன்றுவரை 6 நாட்களுக்கு மேலாக இரண்டு படங்களும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிவருகிறது.மேலும் வாரிசு வசூலை துணிவு தமிழகத்தில் முந்தியுள்ளதாக கூறப்பட்டு வந்தது

Advertisement

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது இதுகுறித்து இயக்குனர் வம்சியிடம் கேட்ட பொழுது அவர் கூறியதாவது,அது அதிகமா இது அதிகமா என்பது இல்லை ரெண்டு படமும் நல்ல போகுது அதான் வேணும்.எனக்கூறி இருப்பதை வைத்து சந்தோசமாக வாழுவோம் என கூறியுள்ளார்.இவரின் இந்த பேட்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,தான் என்று கர்வம் இல்லாமல் இரண்டு படங்களும் நல்லா ஓடனும்னு நினைக்கிறாரே சூப்பர் என கூறி ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Embed video credits : POLIMER NEWS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in