The Indian Times

வாழை படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் மாரிசெல்வராஜ்

தான் பேசக்கூடாது தனது படம் தான் பேசவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் இயக்குனர் மாரிசெல்வராஜ்.இவரின் இயக்கத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்று கூறலாம்.

தனது இயக்கத்தின் மூலம் பல உண்மை சம்பவங்களை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார் இவர்.ஆரம்பத்தில் ஜாதி ரீதியாக படம் எடுக்கிறார் என்று இவருக்கு எதிராக குற்றசாட்டுகள் வைக்கப்பட்டாலும் ஜாதியினால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே அவர் தனது படத்தில் உணர்த்தியிருப்பார்.

Advertisement

இதனாலேயே இவரது இயக்கத்திற்கு இத்தகைய ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

சினிமா மேல் ஆசை ஆனால் கற்று தர ஆள் இல்லை தேடி அலைந்த மாரி செல்வராஜுக்கு வந்தது அதிர்ஷடம் இயக்குனர் ராம் வடிவில்,மாரியின் ஆர்வத்தை பார்த்து அவரை துணை இயக்குனராக சேர்த்துக்கொண்டார்,தனது எல்லா வித்தைகளையும் தனது சிஷியனுக்கு சொல்லி கொடுத்தார் ராம்.

மாரி செல்வராஜ் கற்றது தமிழ், படத்தில் முதல் முறையாக உதவி இயக்குனராக பணியாற்றினார்.பின்னர் தங்க மீன்கள்,தரமணி போன்ற ராமின் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார்.பின்னர் இயக்கத்தை கற்றுக்கொண்டு இவர் உருவாக்கிய படம் தான் பரியேறும் பெருமாள்.

இப்படம் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து இயக்கம் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது இவர் இயக்கிய வாழை படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. படத்தின் வெற்றியை நடிகர்களுடன் கொண்டாடி உள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in