The Indian Times

கூட்டத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகரை அரவணைத்து மேடையிலேயே புகைப்படம் எடுத்த ராம் சரண்:யாருக்கு இந்த மனசு வரும்?

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரண்.இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே தெலுங்கு சினிமாவில் உள்ளது.அண்மையில் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இவர் சேர்ந்து நடித்த RRR படம் மாபெரும் ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ராம் சரண் அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்திலும் RC15 படத்திலும் நடித்து வருகிறார்.

Advertisement

இவர் தற்போது ஆச்சார்யா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மேடையில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது,இவரது ரசிகர் ஒருவர் கூட்டத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து ராம் சரண் உடன் செல்பி எடுக்க முற்பட்டார்,அவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்தனர்,ஆனால் நடிகர் ராம் சரண் பாதுகாவலர்களை விலக்கி ரசிகருடன் மேடையிலேயே செல்பி எடுத்துக்கொண்டார்.இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.ராம் சரணின் இந்த செயலுக்கு மக்கள் அனைவரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

 

video courtesy:TJR open talk

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in