The Indian Times

மாடர்ன் உடையில் பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகி பாக்கியா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.

இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் தான் சுசித்ரா.

Advertisement

இவரின் நடிப்புக்கு உள்ள ரசிகர்கள் கூட்டம் ஏராளம்,இவர் கன்னடத்தில் மாங்கல்யா என்ற சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர்.பின்னர் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய சைவம் படத்திலும் நடித்திருந்தார்.

இப்படி படிப்படியாக முன்னேறி இன்று பாக்கியலட்சுமி சீரியலில் வாய்ப்பு கிடைத்து அசத்தி வருகிறார்.

தற்போது சென்னையில் இவர் தனது குடும்பத்திற்காக சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகியது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது இதுவரை சேலையில் மட்டும் நாடகத்தில் தோன்றிய இவர்,மாடர்ன் உடையில் கலக்கலாக இருக்கும் பொழுது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in