The Indian Times

ப்ரியா கழுத்தில் தாலி கட்டிய அட்லீயின் இனிமையான திருமண தருணங்கள்

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அட்லீ.பின்னர் இயக்குனர் தொழில் என்ன என்பதை கற்றுக்கொண்டு களம் இறங்கினார் .ஆர்யா,நயன்தாரா,ஜெய் மற்றும் நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற படத்தினை இயக்கினார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் அட்லீ.இப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் உடன் கூட்டணி சேர்ந்தார் அட்லீ.

Advertisement

தெறி,மெர்சல்,பிகில் என தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே அலற விட்டார்.இந்த வெற்றிக்கு பிறகு சிறிது நாட்கள் ஓய்வெடுத் அட்லீ மீண்டும் மிரட்டலான திரை கதையுடன் ஷாருக்கானை சந்தித்துள்ளார்.

அவரிடம் கதை கூறவே கதை பிடித்துப்போன ஷாருக்கான் நடிக்க ஒப்புக்கொண்டார்.படப்பிடிப்பு வேலைகள் உடனே தொடங்கப்பட்டது.ஆனால் கொரோனா நிலவரம் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டு வந்த நிலையில் தற்போது மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அண்மையில் அட்லீ மனைவி பிரியா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.தற்போது தனக்கு மகன் பிறந்துள்ளதாக அண்மையில் தெரிவித்து இருந்தார் .

கல்யாணம் முடிந்து 8 வருடங்களுக்கு பிறகு அட்லீ மற்றும் பிரியா அப்பா அம்மா ஆகியுள்ளார்கள் அப்பா ஆகிய சந்தோஷத்தில் உள்ளார் அட்லீ. தற்போது மகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து தனது மகனுக்கு மீர் என பெயரிட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in