The Indian Times

அம்மா அப்பா திருமண நாளை கோவில் சென்று கொண்டாடிய இயக்குனர் செல்வராகவன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன்.இவர் இயக்கும் திரைப்படத்திற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவரது ஆயிரத்தில் ஒருவன் படம் மற்றும் புதுப்பேட்டை படம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

இவர் முதன் முதலில் இயக்கிய படம் காதல் கொண்டேன்.தனுஷ் நடிப்பில் உருவாகிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.கடந்த ஆண்டு இவர் தனுஷை வைத்து இயக்கிய நானே வருவேன் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. தற்போது இவர் மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் படத்தினை நடிகர் தனுஷ் வைத்து இயக்கி வருகிறார்.

Advertisement

இயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது நடிகராகவும் களம் இறங்கி இருக்கிறார் செல்வராகவன்.பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.இப்படத்தில் நடிகர் செல்வராகவனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதனை தொடர்ந்து சாணிக்காயிதம் படத்தில் நடிப்பில் பிரித்தெடுத்திருந்தார்.மேலும் இயக்குனர் மோகன் இயக்கத்தில் தற்போது பகாசுரன் படத்தில் இப்படமும் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

தற்போது இவர் தனது அடுத்தப்பட வேலைகளை தொடங்கியுள்ளார்.படங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் குடும்பத்துடனும் நேரத்தினை செலவிட்டு தான் வருகிறார் செல்வராகவன்.

இன்று இவரின் அம்மா மற்றும் அப்பா கஸ்தூரி ராஜா திருமண நாள் என்பதால் குடும்பத்துடன் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்,

இந்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in