விஜய் தொலைக்காட்சி தற்போது பல சீரியல்களை ஒளிபரப்பு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்தளவிற்கு குடும்ப தலைவிகளை கவர்ந்து விடுகிறது.அதன் வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை அழகாக எடுத்து கூறுவதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
அண்மையில் இந்த நாடகத்தின் ஆயிரம் எபிசோட் கடந்ததற்கான வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. பிற நாடகங்களை போல இல்லாமல் இந்த நாடகத்திற்கு ரசிகர்கள் அதிக ஆதரவுகளை வழங்கி வருகின்றனர்.நாடகத்தில் ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே காண்பிப்பதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் ஜீவா கடையை திறந்து வைத்துவிட்டு அப்படியே சென்றுவிட்டதால் அதை பார்த்த அண்ணன் அதிர்ச்சி அடைகிறார்.வீட்டிற்கு வந்து ஜீவாவை சத்தம் போட்டுள்ளார்,ஜீவா அதற்கு மனைவி வழியில் நின்றுவிட்டு போன் செய்ததால் போனேன் என கூற ஆட்டோ பிடித்து அனுப்ப வேண்டியதானே என கூற காசு கொடுத்து வச்சிருக்கீங்களா என கேட்டு கடுப்பாகிய ஜீவா சும்மா கடுப்பை கிளப்பாதே.கல்லாபெட்டிய ஏன் மூடி வச்சிட்டு போன நான் காச தூக்கிட்டு போயிடுவேன்னா என அண்ணனை எதிர்த்து பேசியுள்ளார்.இதனால் சத்யமூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார்
Embed video credits : VIJAY TELEVISION