The Indian Times

சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்கின் இரண்டாவது வளைகாப்பு புகைப்படங்கள்

புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் ஸ்ரீதேவி.அதன்பின்னர் கிழக்கு கடற்கரை சாலை என்ற படத்தில் நடித்தார்.

இவர் நடித்த படங்களில் இவருக்கு வெள்ளித்திரையில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை அதே சமயம் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்ததால் அதனை பயன்படுத்தி நடிக்க தொடங்கிவிட்டார்.

Advertisement

சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு, கஸ்தூரி, இளவரசி மற்றும் தங்கம் போன்ற தொடர்களில் நடித்த பிரபலமானார் ஸ்ரீதேவி.

நடனத்தின் மீதும் ஈர்ப்பு இருந்ததால் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார்.

தற்போது அனைத்து முன்னணி சேனல்களிலும் ஒளிபரப்பாகும் நாடகங்களில் வில்லி முதல் துணை கதாபாத்திரங்கள் வரை நடித்து சின்னத்திரையவே கலக்கி விட்டார்.ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தில் ஸ்ரீதேவி அசோக் வில்லியாக நடித்து மிரட்டினார்.

இந்த நாடகம் இவரது சீரியல் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.தற்போது திருமணம் செய்துகொண்டு கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது

தற்போது இவருக்கு இரண்டாவது வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in