The Indian Times

80ஸ் கதாநாயகிகள் REUNION.. தோழிகளை சந்தித்த நடிகை சுஹாசினி

1980 ஆம் ஆண்டு நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சுஹாசினி, இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மகள் ஆவார்.

பல படங்களில் நடிப்பினை தாண்டி கேமரா வேலைகள் மற்றும் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

Advertisement

இவர் கதாநாயகியாக நடித்த படங்களில் கோபுரங்கள் சாய்வதில்லை படம் பெரிய வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

அதேபோல் சிந்து பைரவி படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்துள்ளது.

இவர் இயக்குனர் மணிரத்தினத்தினை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார்.

மணிரத்தினம் அண்மையில் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

நடிகை சுஹாசினி தனது தோழிகள் ஆன நடிகை ரேவதி மற்றும் நடிகை ராதிகாவை நேரில் சந்தித்துள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in