The Indian Times

நடிகர் ஜெயம் ரவி குடும்பத்துடன் வெளிநாட்டில் விடுமுறை கொண்டாட்டம்

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்,ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து இன்று சினிமாவில் உச்ச இடத்தினை பிடித்துள்ளார்.

முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.

Advertisement

இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.இவருக்கென தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,

ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி நடித்த திரைப்படம் தனி ஒருவன்.இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.

இப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.இப்படத்தின் வெற்றியினை தற்போது வரை ஜெயம் ரவி தக்கவைத்து கொண்டு தான் வருகிறார்.

வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

மிருதன்,டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க மக்களை வெகுவாக கவர்ந்தார்.தற்போது இவர் பிரதர் படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு அடுத்ததாக சைரன் படம் வெளியாக உள்ளது.விடுமுறைக்காக இவர் வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in