1980 முதல் தமிழ்,மலையாளம்,தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் பிரபல நடிகராக வலம் வந்தவர் பிரதாப் போத்தன்.100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் பிரதாப்.இவர் நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர்.இவர் தமிழில் இயக்கிய வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் ஆகிய படங்கள் பெரும் வெற்றிப்படங்கள் ஆகும்.இவர் தனது முதல் தேசிய விருதினை இவர் இயக்கிய மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்காக பெற்றார்.மலையாளத்திலும் ரித்துபேதம், டெய்ஸி, ஒரு யாத்ரமொழி போன்ற படங்களை இயக்கி முன்னை இயக்குனராகவும் நடிகராகவும் சினிமா உலகினை வளம் வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மஹிந்திரா இயக்கத்தில் வெளியாகிய அழியாத கோலங்கள் என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இவர் படத்தில் இடம்பெற்றுள்ள என் இனிய பொன் நிலாவே என்ற பாடல் இன்றுவரை பலருக்கும் விருப்பப்பாடலாக உள்ளது.தற்போது படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து வரும் இவர் மலையாளத்தில் நடிகர் மோகன் லால் இயக்கத்தில் பரோஸ் என்ற புதிய படத்தில் நடித்தும் வருகிறார்,படிக்காதவன் படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்து அசத்தியிருப்பார்.இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் தான் அதிக படங்கள் நடித்துள்ளார்.தற்போது இத்தகைய புகழ் உடைய பிரதாப் வயது முதிர்வின் காரணமாக இன்று உயிரிழந்துள்ளர்.அவருக்கு வயது 69.
இந்த செய்தி திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.பல பிரபலங்கள் சென்னையில் அவர் இல்லத்திற்கு சென்று நேரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.நடிகை கனிகா இன்று பிரதாப் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,பிரதாப் நல்ல இயக்குனர்,அவர் எனக்கு நல்ல நண்பர்,அவருடன் இரண்டு படங்கள் பணியாற்றியுள்ளேன்,தற்போது அவரது முகத்தினை பார்த்தேன்,அமைதியாக உள்ளது,அவர் என்னிடம் முன்பே கூறியுள்ளார்,நான் தூங்கும் போதே இறந்துவிடவேண்டும் என தற்போது அதைப்போல நடந்துள்ளது.என கூறி வருத்தமடைந்துள்ளார்.
Embed video credits : THANTHI TV
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in