The Indian Times

58வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை நதியா

தமிழ் சினிமாவில் நடிகை நதியாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்தளவிற்கு 80 மற்றும் 90களில் படங்களில் நடித்து பட்டையைக்கிளப்பியவர்.இவர் தெலுங்கில் Nokketha Doorathu Kannum Nattu என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர்.இப்படத்தினை தொடர்ந்து மலையாள படங்களில் நதியா நடித்து வந்தார்,இவர் தமிழில் அறிமுகம் ஆகிய முதல் படம் பூவே பூச்சூடவா ஆகும்.முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து படவாய்ப்பு நதியாவுக்கு வர தொடங்கியது.

பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார் நதியா.2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய எம் குமரன் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்து அசத்தினார். நதியா வயதாகியும் இன்றும் இளமையாக உள்ளார். பூவே பூச்சூடவா படத்தில் பார்ப்பதை போலவே இன்றும் உள்ளதால் இவரை ரசிகர்கள் அதிகம் ரசித்து வருகின்றனர்.

Advertisement

தற்போது இவர் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்,திருமணத்திற்கு பிறகு நதியா படத்தில் நடிப்பதற்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் தனது 58வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in