The Indian Times

வரலக்ஷ்மி நோன்பை வீட்டில் கொண்டாடிய தமிழும் சரஸ்வதி சீரியல் கதாநாயகி நக்ஷத்ரா

தந்தி டிவி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகியவர் நக்ஷத்ரா நாகேஷ்,அங்கிருந்து பாலிமர் சேனல் சென்று இப்படி படிப்படியாக உயர்ந்து இன்று நடிகையாக மாறியுள்ளார்.

ஆரம்பத்தில் இவர் சன்டிவியில் ஒளிபரப்பாகிய சன் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலந்துகொண்டு சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கினார்.பின்னர் தொகுப்பாளினியாக இருந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவே சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் சேட்டை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரைக்கு அறிமுகம் ஆகினார்.அப்படத்தில் இருந்து சில சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்வார்.

இப்படி கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் நடித்த இவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றால் அது தமிழும் சரஸ்வதியும் தான்.இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து பலரின் மனதிலும் நீங்காத இடத்தினை பிடித்து விட்டார் நட்சத்திரா.

Advertisement

இந்த தொடரில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.இந்த தொடர் மூலம் தமிழகத்தில் பல குடும்பங்களிலும் அறியப்பட்டவர் ஆகினார் நட்சத்திரா.

இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.தற்போது இவர் வீட்டில் வரலக்ஷ்மி நோன்பு கொண்டாடியுள்ளார், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in