The Indian Times

ஹே விக்கி..கைய இறுக்கமா புடிச்சிக்கோ..விக்னேஷ் சிவனுடன் கோவிலுக்கு வந்த நயன்தாரா

தமிழின் முன்னணி கதா நாயகிகளில் ஒருவர் நயன்தாரா. இவரை ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைப்பர். ஏனென்றால் நடிப்பில் பிச்சு உதறி விடுவார் நயன்தாரா. ரசிகர்களின் பேராதரவு கொண்டு வசூலில் குவிப்பது மட்டுமில்லாமல் நாளுக்கு நாள் ரசிகர்களையும் பெருகிக்கொண்டே போகும் ஒரு நடிகையாக இவர் இருக்கிறார். ஆரம்பத்தில் இவரது தோற்றம் வேறு மாதிரி இருந்தது. பின்னர் தனது தோற்றத்தை மாற்றிய பிறகு இவருக்கு செல்வாக்கு கூடி கொண்டே போனது. தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாரா முதலிடத்தில் உள்ளார்.

Advertisement

இதுமட்டுமில்லாமல் ஹீரோயின்கள் தனியாக படம் நடித்தாலும் மக்கள் ஆதரவு தருவார்கள் என்பதை நிரூபித்ததும் இவர் தான்! ஏனென்றால் திரைத்துறையில் ஆண்களை முன்னிலைப்படுத்தியே படங்கள் எடுத்து வந்த நிலையில் பெண்கள் தனியாக படம் நடித்தாலும் மக்கள் ஆதரவு தருவார்கள் என்பதும் இவர் நடித்த பின்பே! இவருக்கு பிறகு பல முன்னணி கதாநாயகிகள் பெண்களை முன்னிலை படுத்திய படங்களில் நடிக்க தொடங்கி உள்ளனர்! காதல் வாழ்க்கையில் முன்னொரு காலத்தில் கசப்பான சம்பவங்கள் நடந்தாலும் இப்பொழுது விக்னேஷ் சிவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்!

Advertisement

 

இவர்கள் இருவரும் இணைந்து அவ்வப்போது கோவில்களுக்கு செல்வது வழக்கம். அடிக்கடி திருப்பதி சென்று வருவது வழக்கம். இன்றைக்கு சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு எதிர்பாராதவிதமாக சென்னை மேயர் ப்ரியாவும் வந்துள்ளார். இவர்கள் இருவரும் சிறிது நேரம் சந்தித்து பேசி கொண்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in