நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர்.ரஜினிகாந்த்,கமல்ஹாசன் தளபதி விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் குரல்களை மிமிக்ரி செய்து பலர் கவனத்தினையும் ஈர்த்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் போராடி வெற்றியும் பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
சிறந்த மிமிக்ரி கலைஞரான சிவகார்த்திகேயன்,சூப்பர் ஸ்டார் ,விஜய் சார்,அஜித் சார் ஆகியோரின் குரலில் பேசி சம்பாதித்து தான் கல்லூரிக்கு பணம் காட்டினேன்,சாப்பிட்டேன் என பல மேடைகளில் கூறியுள்ளார்.இவர் நடிப்பிற்கு தற்போது எப்படி ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அதே போல் இவர் மிமிக்ரி திறமைக்கும் ரசிகர்கள் உள்ளனர்.ஜோடி சீசன் நிகழ்ச்சிகளை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கும் பொழுது இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பல உள்ளனர்.சிவகார்த்திகேயனின் இந்த திறமையை தெரிந்துகொண்ட விஜய் டிவி அவருக்காகவே அது இதுஎது என்ற நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தியது.இந்த நிகழ்ச்சி மாபெரும் ஹிட் அடித்தது.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்.இவரது படங்கள் அனைத்தும் 100 கோடி ருபாய் வரை வசூலித்து வருகிறது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய டான் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோரிக்கை வைத்ததற்கு இணங்க சூப்பர் ஸ்டார் குரலில் பேசி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குரலில் பேசி அசத்தியுள்ளதால்,ரசிகர்கள் இதனால் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
Embed video credits: behindwoodstv
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in