The Indian Times

எல்லாரும் இருக்காங்க..அவரு மட்டும் இல்லை..தேம்பி அழுத வடிவேல் பாலாஜி மனைவி

பல திறமையுடைய கலைஞர்களை விஜய் தொலைக்காட்சி மக்களுக்கு அடையாளம் காட்டி வருகிறது.இன்று சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்,சந்தானம்,யோகி பாபு எல்லாரும் விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள் தான்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரின் திறமைகளை அடையாளம் காட்டி வருகிறது.சூப்பர் சிங்கர் ,ஜோடி நம்பர் 1,கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து பலருக்கும் வாய்ப்பளித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியது.விஜய் தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,அந்த அளவிற்கு மக்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான் அது இது எது,இந்த நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு என்ற சுற்றில் நகைச்சுவை செய்ய ஒருவர் வந்து அனைவரையும் சிரிக்க வைப்பார்,அதில் மக்களிடம் அறிமுகமாகி வரவேற்பினை பெற்றவர் தான் வடிவேல் பாலாஜி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

2008 ஆம் ஆண்டு கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகம் ஆகியவர் வடிவேல் பாலாஜி.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு வெற்றிகிட்டவில்லை.கடினமாக உழைத்தார் .இதன்மூலம் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் காமெடி பண்ணுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி மக்களை சிரிக்க வைத்தார்.மிகப்பெரிய பிரபலம் ஆகினார்.இவர் இயக்குன எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகிய பந்தயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.பின்னர் வெள்ளித்திரையில் நிறைய படங்கள் நடித்திருக்கிறார் வடிவேல் பாலாஜி.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

அண்மையில் வடிவேல் பாலாஜி மனைவி அளித்த பேட்டி ஒன்று அனைவர் மனதினையும் கலங்க செய்துள்ளது.அதில் அவர் கூறியதாவது,குழந்தைகளின் படிப்புக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவுகிறார்,மீதமுள்ள செலவுகளை சேனல் கவனத்துக்கொள்கிறது.என்னுடன் எல்லாரும் உள்ளார்கள் ஆனால் அவர் மட்டும் இல்லை என மனம் நொந்து அழுதுள்ளார்.இது காண்பவர்கள் இதயத்தினை சுக்குநூறாக உடைத்துள்ளது .மேலும் அருகில் உள்ளவர்கள் யாரும் அவர்களுக்கு உதவவில்லை ,அவள் கஷ்டம் தான் படுகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.வடிவேல் பாலாஜி இறக்கும்பொழுது நான் உதவுவேன் என்று கூறியவர்கள் எல்லாம் இன்று அவர்களுக்கு உதவுவதாக தெரியவில்லை என அக்கம் பக்கத்தில் கூறுகின்றனர்.இது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது

Embed video credits : INDIAGLITZ

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in