The Indian Times

100 ஏழை குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் கொடுத்த விஜய் தேவர்கொண்டா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டா.இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே தெலுங்கில் உள்ளது.அறிமுகமாகிய சில வருடங்களிலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் விஜய் தேவர்கொண்டா .

தெலுங்கு சினிமாவில் 2011 ஆம் ஆண்டு வெளியாகிய நுவிலா என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்கள் வரிசையாக தெலுங்கில் நடிக்க தொடங்கினார்.

Advertisement

எந்த படமும் சரியான வாய்ப்பினை பெற்று தராத நிலையில் ஒரு நாள் வெற்றிபெறுவோம் என போராடினார்.அவர் போராட்டத்திற்கும் கடின உழைப்பிற்கும் பலனாய் அர்ஜுன் ரெட்டி அமைந்தது.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா.

இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை தெலுங்கு சினிமாவில் கொடுத்துள்ளார்.தற்போதுஇயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லிகர் படத்தில் விஜய் தேவர்கொண்டா நடித்திருந்தார்,ஆனால் இப்படம் இவருக்கு கைகொடுக்க வில்லை

இந்நிலையில் தற்போது இவர் நடிகை சமந்தா உடன் குஷி படத்தில் நடித்துள்ளார்.இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வசூலையும் வாரி குவித்துள்ளது.

இதனால் தனது சம்பளத்தில் இருந்து 1 கோடி ரூபாயை 100 குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் கொடுத்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in