The Indian Times

மீண்டும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷமான செய்தியை கூறிய ஆல்யா மானசா.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா ?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார் ஆல்யா மானசா.அது என்னவென்றால் ஆல்யா மீண்டும் சீரியலில் நாயகியாக களம் இறங்க உள்ளார்.இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.மேலும் நாடகம் விரைவில் வெளியாக உள்ளது,தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் ரசிகர்களிடம் அன்பு கோரிக்கை வைத்துள்ளார்.இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.மேலும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : SANJIEV & ALYA

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in