The Indian Times

அம்மா ஆல்யா மானசா சொல்ற கதையை ரசித்து கேட்கும் ARSH…. ஐயோ செம்ம CUTE அர்ஷ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது ஆல்யா சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Advertisement

தற்போது இவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோவில் மகன் அர்ஷுக்கு ஆல்யா கதை சொல்லியுள்ளார்.அதனை அர்ஷும் அமைதியாக அமர்ந்து அம்மா சொல்லும் கதையை ரசித்து கேட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அர்ஷ் செம்ம கியூட்டாக உள்ளார்,கதையை கூட எவ்வளவு அமைதியாக இந்த வயதிலேயே இருந்து கேட்கிறார் பாருங்கள் என ஆச்சரியமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : SANJIEV AND ALYA MANASA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in