The Indian Times

சினிமா பாணியில் வேலூரில் இருந்து 94 நிமிடத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இதயம்:சாமர்த்தியமாக செயல்பட்ட அம்புலன்ஸ் ஓட்டுநர்

சென்னை க்ரீன் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு 41வயது கொண்ட நபர் ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் நேற்று வேலூரில் 21வயது இளைஞர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்,.அவர் இன்று காலை மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது இதயத்தை எடுத்து 41 வயது நபருக்கு பொறுத்த முடிவு செய்யப்பட்டது.வைரலாகும் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அதன்படி இந்த இதயத்தினை எடுத்துக்கொண்டு அம்புலன்ஸ் 3 மணி அளவில் சென்னையில் இருந்து கிளம்பியது.வழிநெடுகிலும் போக்குவரத்துக்கு போலீசார் போக்குவரத்தினை சரிசெய்து ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.இதனால் 94 நிமிடங்களில் வேலூரில் இருந்து இதயம் சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.இன்னும் இரண்டு தினங்களில் இவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை நடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த ஜனவரி மாதம் மருத்துவமனையில் இதயக்கோளாறு காரணமாக 41வயது நபர் அனுமதிக்கப்பட்ட நிலையில்,உறுப்பு மாற்று துறைக்கு இதயம் கேட்டு அனுமதி கோரிய நிலையில் தற்போது இந்த இளைஞனின் இதயத்தினை முன்னுரிமை காரணமாக இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.அம்புலன்ஸ் வாகனத்தினை இயக்கிய ஓட்டுனரும் சரியான நேரத்தில் இதயத்தினை கொண்டு வந்து சேர்த்துள்ளார்.

video courtesy:polimer news

Advertisement

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in