The Indian Times

மரக்கன்று மூலம் மறைந்த நண்பரான விவேக்குக்கு அஞ்சலி செலுத்திய உயிர்த்தோழன் செல் முருகன்! Cell Murugan Planting Trees

தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட மிக பெரிய இழப்பு சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் மறைவு தான். ஏராளமான படங்களில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மாபெரும் கலைஞன் , கடந்த மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். வெள்ளி திரை பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.இவர் இறுதியாக ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இதை தொடர்ந்து அரண்மனை 3 , இந்தியன் 2 , யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார் விவேக். ஆனால் இந்த படங்கள் வெளியாவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார் என்பது தான் வருத்தம். மேலும் தற்போது அவர் பங்கேற்ற lol எங்க சிரி பாப்போம் என்ற நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி ஓ.டி.டி யில் வெளியாகியது! அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் வெளியான அரண்மனை 3 படத்திலும் விவேக் அவர்களின் நடிப்பையும் நகைச்சுவையையும் பார்க்கும் பொழுது இப்படிப்பட்ட ஒரு சிறந்த கலைஞரை மீண்டும் எங்கு காண்போம் என்ற எண்ணத்தை கண்ணீர் மூலம் பலரும் வெளிக்காட்டியதும் நமக்கு தெரிந்த ஒன்றே!

Advertisement

இந்நிலையில் விவேக் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நெருங்கிய நண்பரான செல் முருகன் மரக்கன்றுகளை நட்டுள்ளார்! ஏனெனில் உலகமறிந்த உண்மை என்னவென்றால் விவேக் அவர்களுக்கு மரம் நடுவது மிகவும் பிடித்த ஒன்று! அப்துல் கலாம் ஐய்யா அவர்களின் கனவை நிறைவேற்றும் பணியில் விவேக் களமிறங்கினார்! பின்பு அவர் மறைந்த நிலையில் அவரது நண்பர் செல் முருகன் இளைஞர்களின் துணையோடு மரம் நடும் பணியை தொடங்கியுள்ளார்!அந்த நெகிழ்ச்சிப்பூர்வமான விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

https://www.youtube.com/watch?v=fmZq9Jjp3DM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in