The Indian Times

30 ஆண்டுகால சினிமா நிறைவை கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் ஷங்கர்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.குறைந்த அளவே படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.காரணம் இவர் படத்தில் உள்ள கதையும் அதில் இருக்கும் பிரம்மாண்டமும் தான்.

பல முன்னணி நடிகர்களும் இவர் நடிப்பில் ஒருமுறையாவது நடித்துவிடமாட்டோமா என ஏங்கி வருகின்றனர்.

Advertisement

தற்போது இயக்குனர் சங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஆர்சி 15 என்ற படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கிய எந்திரன்,2.0 போன்ற படங்கள் எல்லாம் மாபெரும் வரவேற்பினையும் வசூலையும் தமிழ் சினிமாவுக்கு பெற்று கொடுத்துள்ளது.

இவர் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார்,இப்படத்திற்காக தற்போது அமெரிக்காவில் உள்ளார் ஷங்கர்.

சங்கர் சினிமாவுக்கு வந்து 30ஆண்டுகள் ஆகிய நிலையில் இதனை அவர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்,இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in