The Indian Times

பாண்டிக்கு தெரியாமல் கதிரை மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வரும் கோமதி… பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வர உள்ளது,குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்துள்ளதால் இந்த தொடர் முடிவடைய உள்ளது.ரசிகர்களிடம் இது சோகத்தினை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த தொடரின் சீசன் 2 வெளியாக உள்ளது,இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல் இந்த முறை அப்பா மற்றும் பையன்களுக்கு இடையே நடக்கும் இனிய உறவுகளை காண்பித்துள்ளது.

செந்தில் மீனாவை திருமணம் செய்துகொண்டு வீட்டிற்கு வருகிறார்,இதனை கண்டு மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார்.மேலும் இதற்கு காரணமான தனது மகன் கதிரை வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார் பாண்டி.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்,மீனா மாமியார் கோமதியை அழைத்து கொண்டு கதிரை மீண்டும் வீட்டிற்குள் கூட்டி வருகிறார், அதனை கண்டு பாண்டி அதிர்ச்சி அடைகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in