The Indian Times

“எப்படி சொல்றதுன்னே தெரியல!” மக்களின் அன்பால் வார்த்தைகளின்றி தவித்து கண்கலங்கிய ராஜு! Raju 1st Story After Bigg Boss

பிக் பாஸ் போட்டியாளர்களுள் ஒருவராக வந்து மக்கள் மனதில் நின்று இன்று தனது நகைச்சுவையாலும் நல்ல உள்ளத்தாலும் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியை தன்வசமாக்கியவர் தான் ராஜு என்கிற ராஜு ஜெயமோகன்! திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த இவர் சிறு வயதில் முதலே சினிமா மேல் அதீத ஆர்வம் கொண்டதன் விளைவே கல்லூரி நாட்களில் சிறப்பான திறைமைகளை வெளிப்படுத்தி இயக்குனர் பாக்கியராஜ் அவர்களிடம் துணை இயக்குனராக தன் கலைப்பணியை தொடங்கினார்.

Advertisement

இவருடன் சினிமா பயணத்தை தொடங்கிய பலரில் குறிப்பிடத்தக்க இருவர் என்றால் அது ரியோ ராஜ் மற்றும் கவின். இவர்கள் இருவருமே இதற்கு முந்தைய பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவை பெற்றாலும் கோப்பையை வெல்லும் அளவிற்கு ஆதரவு இல்லாதது வருத்தமே. ஆனாலும், ராஜு இவர்களை விட தனி சிறப்புடன் விளக்கியதும் அனைவரும் அறிந்த ஒன்றே. உடல் வலிமையை நிரூபிக்கும் போட்டிகளை தாண்டி மனவலிமை மற்றும் மற்றவர்களோடு பழகும் விதம் மற்றும் தன்னிலை மறவாமை என சொல்லி கொண்டே போகலாம். வந்த நாள் முதல் வெற்றி பெரும் நாள் வரை ஒரே மனநிலையில் இருந்து மக்கள் மனதில் இடம்பிடித்தது மட்டும் இல்லாமல், கதை சொல்லும் விதம் மற்றும் நகைச்சுவை திறன் என மக்களுக்கு ராஜூவை பிடிக்க பல காரணங்கள் உண்டு.

Advertisement

வாரா வாரம் இவரை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்தாலும் மக்கள் இவரை முதல் ஆளாக காப்பாற்றியதும் அனைவரும் அறிந்ததே. நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு சீரியலில் நடித்த இவர், இனி வரும் காலங்களில் பட வாய்ப்பு குவியும் என்பதால் இனி அந்த சீரியலில் நடிப்பாரா என்பது கேள்வி குறியே! இப்பொழுது ராஜு வெற்றி பெற்று கோப்பையுடன் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இப்பொழுது பிக் பாஸுக்கு பிறகு முதல் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை உருக்கமாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in