The Indian Times

மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய SINGER அஜய் கிருஷ்ணா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த தொலைக்காட்சியில் சிறிய வேடத்தில் யார் வந்தாலும் மக்களிடம் அதிகளவு பிரபலமாகிவிடுவர்.இதுதான் இந்த தொலைக்காட்சியின் சிறப்பம்சமாகும்

இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் வெள்ளித்திரையில் பாடகராக வலம் வருகின்றனர்.அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீனியர் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் தான் அஜய் கிருஷ்ணா.இவரது குரலுக்கென தனி ரசிகர்கள் உண்டு.

Advertisement

இவரை செல்லமாக சின்னத்திரை உதித் நாராயணன் என அழைப்பார்கள்.அந்தளவிற்கு அருமையாக பாடும் திறமையுடையவர்.இவர் தற்போது வெள்ளித்திரையிலும் பாடல் பாடி அசத்தி வருகிறார்,மேலும் பல நாடுகளுக்கும் சென்று அங்குள்ள தமிழர்களிடம் பாடல்களை பாடி வரவேற்பும் பெற்றுள்ளார்.

இவர் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் பாடல்களை பாடி வருகிறார்.மேலும் சூப்பர் சிங்கர் சில நிகழ்ச்சிகளில் விருந்தினராக வந்து பாடல்களை பாடி அங்குள்ளவர்களை மகிழ வைப்பார்.

அண்மையில் மனைவி ஜெசி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.இந்நிலையில் தற்போது தங்களுக்கு மகன் பிறந்திருப்பதை மகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

தற்போது மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in