The Indian Times

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் நடிகை ப்ரியா பவானி சங்கர்

செய்தி வாசிப்பாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் ப்ரியா,பின்னர் அங்கிருந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து நாடகத்தில் நடிக்க தொடங்கினார்.

இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது எங்கும் கிடைக்கவில்லை,இதற்கான சரியான நேரத்தினை நோக்கி காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

Advertisement

இதன்மூலம் ப்ரியா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.பல இளைஞர்கள் மனதினையும் கொள்ளையடித்தார் ப்ரியா.

பிரபலமாகியதை தொடர்ந்து பட வாய்ப்புகள் பிரியாவிற்கு தொடர்ச்சியாக வர தொடங்கியது,அதன்படி மேயாத மான் என்ற படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்து சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.

இப்படத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக படம் நடிக்க தொடங்கினார்.இவரது கதாபாத்திரத்திற்கு படங்களில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய ஓ மணப்பெண்ணே திரைப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.

அதேபோல் கடந்த வாரம் ருத்ரன் படம் வெளியாகி இருந்தது.படத்தில் லாரன்ஸ் மாஸ்டருக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியா,இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இவர் சினிமாவில் மட்டுமில்லாமல் தற்போது பிஸினஸிலும் இறங்கிவிட்டார்.சென்னையில் சொந்தமாக உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.இந்த உணவகத்தில் வழங்கும் உணவுகள் நல்ல தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

தற்போது இவர் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in