The Indian Times

குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்ற நடிகை சரண்யா பொன்வண்ணன்

தமிழ் சினிமாவில் நாயகன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன்,இப்படத்தில் இவரது நடிப்பு பலரையும் கவர்ந்து இருந்தது.

இதனால் சரண்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் சினிமாவில் வர தொடங்கியது,அனைத்தையும் பயன்படுத்தி சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் உயர்ந்தார் சரண்யா.

Advertisement

இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிப்படங்களில் நடித்தும் பட்டையை கிளப்பி இருக்கிறார் சரண்யா.

பிரபல இயக்குனர் மற்றும் நடிகரும் ஆனா பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அழகிய மகள் ஒருவரும் உள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் அம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்,சூரியா,தனுஷ்,சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து அசத்தியுள்ளார்.

இவருக்கு இந்த வருடம் தமிழ் மற்றும் தெலுங்கு என 6 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

இப்படி படம் ஒரு பக்கம் இருக்க குடும்பத்திற்காகவும் நேரத்தினை செலவழித்து வருகிறார்,இவர் குடும்பத்துடன் வெளிநாடு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in