The Indian Times

ஆல்யாவுக்கு அறுவை சிகிச்சை எதற்கு… அவருக்கு என்னாச்சு… அவரே வெளியிட்டுள்ள வீடியோ…

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரையில் அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே ராஜா ராணி சீரியலுக்கு பிறகு உருவாகியது. இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

முதல் குழந்தை பிறந்த பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி சீரியல் 2 ஆம் பாகத்தில் நடிக்க தொடங்கினார்.பின்னர் இரண்டாவது முறை கர்ப்பம் ஆகியதால் அந்த நாடகத்தில் இருந்து வெளியேறினார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார் ஆல்யா மேலும் புதிய இனியா என்ற சீரியல் ஒன்றில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இந்த புதிய சீரியல் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆல்யாவின் பிற சீரியல்களை போலவே இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஆல்யா மானசாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.இந்த புகைப்படத்தினை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஆல்யாவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக தெரிவித்திருந்தார்.இதனால் இவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து அவருக்கு என்னாச்சு என கேட்டு வருகின்றனர்,ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.அதன்படி கபடி விளையாடும் பொழுது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் ஒருமாதத்தில் சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக அறிவித்துள்ளார்.இந்த வீடியோவில் அவர் சீக்கிரம் குணமடைய வேண்டி ரசிகர்கள் அவருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர்.

Embed video credits : SANJIEV AND ALYA

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in