The Indian Times

மகனை மடியில் போட்டு தாலாட்டு பாடிய ஆல்யா மானசா… அடடே அம்மா ஆல்யா மான்சா பாசத்துல பிண்ணுறாங்களே

ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.அண்மையில் தனது மகன் அர்ஷ் முகத்தினை ரசிகர்களுக்கு காண்பித்தார்.

ஆல்யா மீண்டும் நாடகத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.விரைவில் அந்த நாடகம் ஒளிபரப்பாக உள்ளது.இதனை அண்மையில் அவரே அறிவித்திருந்தார்.இதனால் ரசிகர்கள் மீண்டும் சின்னத்திரையில் ஆல்யாவை காண பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.இந்நிலையில் ஆல்யா தனது மகனை மடியில் படுக்க வைத்து தாலாட்டு பாடியுள்ளார்.இந்த வீடியோவை யூடியூபில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் ஆல்யா மகனை தான் கொஞ்சி வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

Embed video credits : SANJIEV & ALYA MANASA

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in