The Indian Times

இந்த ஆள் யாருன்னே தெரியாது,என்னிடம் பிரச்சனை செய்கிறார்… பாரதியை ஊரில் மாட்டிவிட்ட கண்ணம்மா | பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.சீரியலில் பாரதி கண்ணம்மா குழந்தைகளுடன் டி என் ஏ டெஸ்ட் எடுத்துள்ளார்.இந்த டெஸ்ட் முடிவுகளை அறிய நேரடியாக டெல்லீக்கு சென்றார் அங்கு ஹேமாவும் லக்ஷ்மியும் இவரது குழந்தைகள் தான் டிஎன்ஏ ஒற்றுப்போவதாக கூறவே பயங்கர அதிர்ச்சி அடைந்து நமது மனைவியையும் குழந்தைகளையும் இப்படி சந்தேகப்பட்டுவிட்டாயாமே என வேதனை கொள்கிறார்.கண்ணம்மாவை பார்த்து நீ எனது சாமி ,நான் தப்பு செஞ்சிட்டேன் என்னை மன்னித்திடு என கூறி கண்ணம்மா காலில் விழுகிறார்.இருப்பினும் கண்ணம்மா பாரதியை ஏற்க மறுத்து ஊரை விட்டு செல்கிறார்.

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் பாரதி கண்ணம்மா இருக்கும் ஊருக்கே வந்துவிடுகிறார்.கண்ணம்மாவை பார்த்து தன்னுடன் வாழ வேண்டும் என கெஞ்சுகிறார்,ஆனால் கண்ணம்மா இந்த நபர் என்னிடம் பிரச்சனை செய்கிறார் என கூறி ஊர் மக்களிடம் மாட்டி விடுகிறார்.பின்னர் பஞ்சாயத்துக்கு சென்றதில் பாரதியை ஊரைவிட்டு வெளியேற வேண்டும் என நாட்டாமை கூறுகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் பாரதி பாவம் அவரை ஏத்துக்கோங்க என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in