The Indian Times

நடராஜன் ஷாருக் என தமிழக வீரர்களை போட்டிபோட்டு ஏலம் எடுக்கும் ப்ரீத்தி – காரணம் என்ன தெரியுமா..?

பஞ்சாப் அணி நிர்வாகி ப்ரீத்தி ஜிந்தா அவருக்கு என்னதான் அக்கறை தமிழக வீரர்கள் மீது என்று சந்தேகம் நடந்து முடிந்த ஐ பி எல் தொடர் ஏலத்தில் எழுந்துள்ளது. பஞ்சாப் அணி பொதுவாக வீரர்களை தேர்வு செய்வதில் சென்னை அணியுடன் போட்டி போட்டு தான் தேர்வு செய்யும். சென்னை அணி எதேனும் ஒரு வீரரை குறிப்பிட்ட தொகைக்கு ஏலம் கேட்டால் அதற்கு பஞ்சாப் அணி போட்டி போட்டு அதிக அளவில் ஏலம் எடுத்து அந்த வீரரை தக்கவைத்துக் கொள்ளும்.

இதுபோல பல விஷயங்களில் சென்னை அணியின் பாணியை காபி அடிக்கும் பஞ்சாப் அணி. லோகோ மற்றும் பெயரை கூட விட்டுவைக்கவில்லை. என்ன தான் பஞ்சாப் அணி இவ்வாறு செய்தாலும் ஒரு பகுதியில் தமிழக வீரர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனென்றால் நட்ராஜன் முதன் முதலில் பஞ்சாப் அணியில் தான் தனக்கான பயணத்தைத் தொடங்கினார்.

பிரீத்தி ஜிந்தா, ஷேவாக் அலோசனைக்கு ஏற்ப நட்ராஜனை அணியில் எடுத்தார். பின்னர் அஷ்வின் கேப்டனாக 2019 ஐ பி எல் போட்டியில் விளையாட வைத்தார். இதுபோன்று பல விதத்தில் தமிழக வீரரை விட்டுக்கொடுக்கமால் இருக்கும் பிரீத்தி ஜிந்தா இந்த ஆண்டும் விட்டுக் கொடுக்கவில்லை.

ஆம் இந்த ஆண்டு தமிழக வீரர் ஷாருக்கானை கிட்டத்தட்ட 5.6 கோடி அளவில் எடுத்து இருக்கிறது. சரியான ஃபினிஷர் இவராக தான் இருப்பார் என்ற எதிர்பார்ப்பில் இவர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in