The Indian Times

மீண்டும் கடன் வாங்க ஆரம்பித்த ஐஸ்வர்யா..கண்டிக்கும் தனம்.. பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தனம் மருத்துவமனையில் சோதனை செய்ததில் அவருக்கு நெஞ்சில் கட்டி இருப்பதாக மருத்துவர் கூறுகிறார்,இதனை கேட்டு உடைந்து போகிறார் தனம்,அந்த நேரம் அங்கு வரும் மீனா மருத்துவரிடம் இதுகுறித்து கேட்கவே தனத்திற்கு நெஞ்சில் கட்டி இருப்பதை தெரிந்துகொள்கின்றனர்.இதனால் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைகின்றனர்.இந்நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்ல கூடாது என தனம் மீனாவிடம் கூறுகிறார்.மேலும் விரைவில் அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும் என மருத்துவர் கூறியுள்ளார்.

தற்போது இந்த வார புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,இதில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் மூர்த்தி ஏற்றுக்கொள்கிறார்,இந்நிலையில் ஐஸ்வர்யா மீண்டும் கடன் வாங்க தொடங்கியுள்ளார்,இதுகுறித்து கேள்விப்பட்ட தனம் கடுப்பாகி ஐஸ்வர்யாவிடம் இதுகுறித்து கேட்டு அவரை வெளுத்தெடுக்கிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் ஐஸ்வர்யா திருந்த மாட்டார் என திட்டி தீர்த்து வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in