The Indian Times

துக்கம் தாங்காமல் புனீத் நினைவிடத்தில் கதறி அழுத சூர்யா! Surya Crying Video

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களுள் ஒருவரானவர் தான் சூர்யா! இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு! இன்றும் இவர் படங்களை பார்க்க தனி கூட்டத்தை தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலக அளவில் சேர்த்து வைத்த பெருமை இவரின் திறமைக்கே சாரும்! இப்பொழுது கூட இவர் நடித்து வெளியான ஜெய் பீம் திரைப்படம் உலக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது! சமீப காலங்களாகவே சமூக அக்கறை கொண்ட படங்களை நடித்து வருகிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே!

Advertisement

இவர் அரசியல் பேசுகிறாரா என்றும் பலர் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தாலும் இவர் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை! இவர் தற்பொழுது கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் புனீத் ராஜ்குமார் அவர்களின் திடீர் மறைவு அனைவரும் அறிந்ததே! அவரது இழப்பின் செய்தியை கன்னட உலகினர் இன்னும் கடந்து வரவில்லை என்பதே உண்மை! இந்நிலையில் நல்ல உள்ளமாக விளங்கிய புனீத் அவர்களை தமிழ் நடிகர்களும் அவரது சமாதிக்கு சென்று அவருக்கு நேரில் மலர்மாலையிட்டு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்! அங்கு சென்று நடிகர் சூர்யா இன்று நேரில் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதையை செலுத்தி வந்தார்! அப்பொழுது அவர் துக்கம் தாங்காமல் கண்ணீர்விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக!

Advertisement

சூர்யா பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோவை முழுமையாக பார்க்கவும்,நடிகர் சூர்யா புனித் ராஜ்குமாரின் நெருங்கிய குடும்ப நண்பர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in