The Indian Times

ஏய் என்னப்பா இப்படியெல்லாம் கேள்வி கேட்குறே… பத்திரிகையாளர் சந்திப்பில் காண்டாகிய வரலக்ஷ்மி சரத்குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வரலட்சுமி.கதாநாயகி,வில்லி ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் பட்டையை கிளப்புபவர்.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.

இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது நடிப்பு திறமையை வெளி காண்பித்து பலரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.

Advertisement

அன்று முதல் இன்று வரை நடிப்பில் அதிக ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Embed video credits : CINEULAGAM

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இந்த வருடம் மட்டும் படங்களை கையில் வைத்துள்ளார் வரலக்ஷ்மி.

மேலும் இவர் நடித்த தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.இவருக்கு அடுத்ததாக தயாள் பத்மநாபன் இயக்கத்தில் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இவருடன் ஆரவ்,சந்தோஷ்,மஹத் என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.இப்படம் இன்று ஆஹா ஓடிடியில் வெளியாகி உள்ளது.இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் வெற்றிப்படமாக அமைய ரசிகர்கள் வரலட்சுமிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இப்படத்திற்காக வரலக்ஷ்மி பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்துள்ளார்,இதில் அவர்கள் கேட்ட கேள்வியால் செம்ம கடுப்பாகியுள்ளார் வரலக்ஷ்மி,மேலும் பத்திரிகையாளர்களிடம் கடுமையாகவும் நடந்துகொண்டுள்ளார் ,இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in