The Indian Times

பிரபல நடிகையுடன் டேட்டிங் சென்று மாட்டிக்கொண்ட நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா

நடிகை சமந்தா மற்றும் நாகா சைதன்யா இருவரும் காதலித்து இரண்டு வீட்டார் சம்மதத்துடனும் கடந்த 2017ல் திருமணம் செய்துகொண்டார்கள்.இருவரும் சந்தோசமாக தான் வாழ்ந்துகொண்டிருந்த நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.இவர்கள் இருவரும் இணைவதற்கு குடும்பத்தினர் முயற்சி செய்து வரும் நிலையில் ரசிகர்களும் அதையே விரும்பினர்.ஆனால் இருவருக்கும் அதில் உடன்பாடில்லை என்பதால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

Advertisement

இருவரும் தங்களது படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர்,சமந்தாவுக்கு அடுத்ததாக சகுந்தலம் படம் வெளியாக உள்ளது.அதே போல நடிகர் நாக சைதன்யாவுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படம் வெளியாக உள்ளது.அதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் இவர்களின் படத்திற்கு ரசிகர்களும் ஆவலுடன் ,காத்திருக்கின்றனர்.இருவர் தரப்பில் இருந்தும் பிரிவுக்கு காரணம் என்ன என்பதை யாரும் விளக்கவில்லை.இந்நிலையில் பிரபல நடிகை ஒருவருடன் வெளிநாட்டில் நாகசைதன்யா இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்த புகைப்படத்தில் வெளிநாட்டில் உள்ள ரசிகருடன் நாக சைதன்யா புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்கும் பொழுது அந்த புகைப்படத்தில் பொன்னியின் செல்வன் பட புகழ் நடிகை சோபிதா இருப்பது தெரியவந்துள்ளது.ரசிகர்கள் இருவரும் டேட்டிங் சென்றுள்ளார்கள் என கூறி வருகின்றனர்.இருப்பினும் அடுத்த படத்திற்காக கூட இருவரும் ஒன்றாக வெளிநாடு சென்றிருக்கலாம் எனவும் ஒரு தரப்பு கூறி வருகின்றது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in