The Indian Times

ஆஸ்திரேலியாவில் விடுமுறையை கொண்டாடிய நடிகை ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி தற்பொழுது நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா.இவர் நடிகையாக பச்சை கிளி முத்துச்சரம் படத்தின் மூல ம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர்.

இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், தரமணி , வடசென்னை, அரண்மனை1 மற்றும் அரண்மனை 3, மாஸ்டர் வரை தொடங்கியது.

Advertisement

அண்மையில் இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய வடசென்னை படத்தில் சந்திரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்,இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கொரோனாவுக்கு பிறகு அமையவில்லை ,இதனால் கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.மேலும் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்று தனது குரலால் இளைஞர்களை கொள்ளை அடித்தும் வருகிறார்.

அண்மையில் இவர் தமிழில் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் பெரும் ஹிட் ஆக இவருக்கு அமைந்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் தற்போது பாடல் வாய்ப்புகள் இவர்க்கு தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறது. இவருக்கு அடுத்ததாக இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படம் வெளியாக உள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஆண்ட்ரியா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

தற்போது இவர் ஆஸ்திரேலிய நாட்டிற்கு விடுமுறைக்கு சென்றுள்ளார். இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in