The Indian Times

பாடகர் பம்பா பாக்கியா உடலை பார்த்து உடைந்து போய் நின்ற AR.ரஹ்மான்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகிய எந்திரன் 2.0 படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் பாடல் பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்றது.இப்பாடலை பாடியவர் தான் பம்பா பாக்கியா.பிரபல இசைக்கலைஞர் பம்பா போல இவரின் இசைஞானம் உள்ளதால் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இவருக்கு பம்பா என்ற பட்டத்தினையும் சேர்த்து கொடுத்தார்.புள்ளினங்காள் பாடலால் இவரது குரல் எட்டுத்திக்கும் ஒலித்தது.மேலும் சர்க்கார் படத்தில் இவர் பாடிய சிம்டங்காரன் என்ற பாடல் பெரும் வரவேற்பினை பெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு மிக நெருக்கமானவர் பம்பா பாக்கியா.பொன்னியின் செல்வன் படத்தில் கூட பொன்னி நதி என்ற பாடலை பம்பா பாடியுள்ளார்.மேலும் சர்வம் தாளமயம் ,இரவின் நிழல் என பல படங்களிலும் இவர் குரல் ஒலித்துள்ளது.முக்கியமாக ஏ ஆர் இசையில் உருவாகும் படங்களில் இவர் பாடிய பாடல் கட்டாயம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது,உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மாரடைப்பால் உயிர் பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இன்று அவரது உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.காலை முதல் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.காலையில் ஏஆர் ரஹ்மான் மகன் அமீன் நேரில் வந்து பாக்கியாவுக்கு அஞ்சலி செலுத்தி சென்ற நிலையில் தற்போது ஏஆர் ரஹ்மான் நேரிடையாக பம்பா பாக்கியாவுக்கு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் தாங்களும் தங்களின் இரங்கலை பாடகர் பாக்கியாவுக்கு தெரிவித்து வருகின்றன

Embed video credits : Little Talks

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in