The Indian Times

ஜெய் பீம் படம் பார்த்து சோகத்தில் தேம்பி அழுத சீன மக்கள்

தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகர் சூர்யா .இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்ததே தவிர முக்கிய நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.அதற்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இயக்குனர் பாலாவின் நந்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.தனது நடிப்பு திறமையை மொத்தமாக காண்பித்த நடிகர் சூர்யாவிற்கு இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக அமைந்தது.இந்த படத்தின் மூலம் சூர்யா முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இயக்குனர் சுதா கொங்கராவ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா,ரஜிஷா விஜயன்,பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்த திரைப்படம் ஜெய் பீம்.இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அமேசான் ஓடிடி தளத்தில் படம் வெளியாகியது.இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை அளித்தாலும் படத்தின் கதை அவர்களை ஏமாற்றவில்லை.உண்மை சம்பவத்தின் அடிப்படையை மையக்கருவாக கொண்டு தயாரிப்பாளர் படத்தினை வடிவமைத்துள்ளார்.இப்படம் சூர்யா ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தினை பார்த்த பலரும் இயக்குனரை புகழ்ந்தும் பாராட்டியும் தள்ளினர் மேலும் இப்படத்தில் பெரிய ஹீரோ சூர்யா நடித்ததினால் தான் இப்படியெல்லாம் நடந்துள்ளது என்பதே தெரிகிறது என நடிகர் சூர்யாவும் பாராட்டு மழையில் நனைத்தனர்.

Advertisement

தற்போது ஜெய் பீம் படம் சீனாவில் பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.இந்த படத்தினை பார்த்த சீனா மக்கள் தேம்பி அழுதுள்ளனர்.இப்படத்தினை பார்த்த ரசிகர்கள் கூறியதாவது ,வெளிநாட்டினர் என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது அவர்கள் பட்ட துயரத்தினை ,இந்த கதை மன வலியை ஏற்படுத்தியது என நெகிழ்ச்சியாகி தெரிவித்துள்ளனர்.

Embed video credits : MAKKAL OSAI TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in