The Indian Times

குடும்பத்துடன் பழனியில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.தனது எதார்த்தமான நகைச்சுவையினால் பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இவர்.

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்தார்.பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்,மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

Advertisement

இவர் இல்லாத படமே தற்போது இல்லை என்று கூறலாம் அந்தளவுக்கு முன்னணி நடிகராக உருவெடுத்து சினிமாவை கலக்கி வருகிறார்.ரோபோ சங்கர் பல போராட்டங்களுக்கு பிறகு திரைக்கு வந்தார் என்பது அனைவர்க்கும் தெரியும்.

தற்போது ரோபோ சங்கர் உடல் மெலிந்து காணப்படுவது பெரும் சங்கடம் அளிப்பதாக உள்ளது.இந்நிலையில் இவர் மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி வருகிறார்,

அண்மையில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மரணப்படுகைக்கு சென்று வந்ததாக ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.தற்போது மீண்டும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் பழனி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in