The Indian Times

“நீங்க ஏன் அந்த கட்சில சேரக்கூடாது?” ரசிகரின் கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த பிக் பாஸ் சனம்.

விஜய் டிவியில் அதிக ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. முதலில் இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு தனி fan base இருக்கிறது. இதுவரை தமிழில் 4 சீசன்கள் முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல், நட்ப்பு , சண்டை , ஒற்றுமை என அனைத்துமே இருப்பதால் தான் மக்கள் அதை விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் கடந்த சீசனில் அதிகளவில் சண்டைகள் இருந்தது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு பிக் பாஸில் கலந்துகொண்ட சனம் ஷெட்டி சொல்ல்லவே வேண்டாம். சனம் ஷெட்டிக்கும் பாலாவிற்கு அடிக்கடி முட்டிக்கொண்டு பிரச்னை ஏற்படும். அதன் பின்னர் சனம் வெளியேறிவிட்டார்.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தற்போது கமல் ஹாசன் அவருடைய மக்கள் நீதி மையம் தோல்வியுற்றதை அடுத்து கட்சியை விட்டு முக்கிய உறுப்பினர்கள் விலகிக்கொண்டே இருக்கும் நிலையில் சனம் அதற்கு டீவ்வ்ட் செய்திருந்தார். இது தான் உங்கள் விசுவாசமா? உங்கள் அனைவருக்கும் என் கேள்வி, நீங்கள் ஜெய்திருந்தாலும் இப்படி தான் விலகி இருப்பீர்களா? நீங்கள் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை உங்களுக்கு வாக்களித்த மக்களையும் ஏமாற்றிவிட்டிர்கள் என்று கடுமையாக விமர்சித்து ட்வீட் போட்டார்.

இதற்கு ரசிகர் ஒருவர் நீங்கள் கமல்ஹாசனுடன் மக்கள் நீதி மையம் கட்சியில் சேர்ந்து மக்களுக்கு பணியாற்றலாமே என்று கேள்வி எழுப்பியதற்கு , சனம் “நன்றி. பொது நலனை நோக்கமாகக் கொண்ட கருத்துக்களை நான் ஆதரிக்கிறேன். இது எந்த கட்சி அல்லது எந்த வேட்பாளரிடமிருந்து வருகிறது என்பது முக்கியமல்ல. அரசியலில் இல்லாமல் கூட மக்களுக்கு நிறைய சேவை செய்ய முடியும்.” என்று பதிலளித்துள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in