The Indian Times

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் இரண்டாவது வளைகாப்பு புகைப்படங்கள்

சின்னத்திரை நடிகராக கலக்கி வருபவர் காயத்ரி யுவராஜ்,இவர் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல முன்னணி தொடர்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் காயத்ரி.

இவர் முதல் முதலாக சன்டிவியில் ஒளிபரப்பாகிய தென்றல் நாடகத்தில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகினார்.இந்த தொடரில் நிலா கேரக்டரில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

Advertisement

இவருக்கு நடனம் சொல்லிக்கொடுத்த யுவராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் திருமணம் செய்துகொண்டார்,இவர்களுக்கு அழகிய மகன் ஒருவரும் உள்ளார்.

மேலும் தொடர்ந்து நாடகங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.இவர் சீரியல்களில் மட்டுமில்லாமல் சினிமாக்களிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1 போட்டியிலும் கணவர் உடன் கலந்துகொண்டு நடனமாடி அசத்தினார்.

தற்போது இவர் இரண்டாவதாக குழந்தை உண்டாகியுள்ளார்,இவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in