The Indian Times

தந்தையை நினைத்து நிகழ்ச்சியில்கவலையடைந்த சித்து..ஆறுதல் கூறிய ஸ்ரேயா

மக்களுக்கு பிடித்த பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒரு தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா ஆவர்.இவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றனர்.இந்த சீரியலில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்.இந்த தொடரில் இவர்களது பொருத்தத்தினை பார்த்து ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் வண்ணம் இவர்களது நடிப்பு மட்டும் ஜோடி பொருத்தம் இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த திருமணம் சீரியல் ஆனது கொரோனா நிலவரத்தினால் விரைவாக முடிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்தது.மேலும் மீண்டும் இவர்களை ஒன்றாக திரையில் பார்க்க முடியாதா என்று ரசிகர்களை ஏங்க வைத்தது.இந்நிலையில் இந்த நாடகத்தில் நடித்த சித்து மற்றும் ஷ்ரேயாவிற்கு இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் எண்ணியது போல இருவரும் வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது சித்து விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருகிறார்.இந்நிகழ்ச்சியின் 500வது எபிசோட் விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 15 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது.இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ராஜா ராணி சீரியல் ஹீரோ சித்து தனது அப்பா இப்போ இல்லை என கூறி கவலைப்பட்டுள்ளார்.அவரது மனைவி ஸ்ரேயாவும் மேடைக்கு வந்து கணவனுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் சித்துவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in