The Indian Times

உன் மூக்கை உடைச்சி.. உன்னை ஊரைவிட்டே விரட்டுறேண்டி.. அபியிடம் சவால் விட்ட வெற்றி… THENDRAL VANTHU ENNAI THODUM

விஜய் தொலைக்காட்சியில் நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்த ரசிகர்களுக்காக புது புது நாடகங்களை களம் இறக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.அப்படி இதில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த தொடரின் மூலம் இருவரும் தமிழக மக்களின் இதயத்தில் தனி இடத்தினை பிடித்துள்ளார்கள் எனலாம்,அந்தளவிற்கு கணவன் மனைவியாக நடித்து அசத்தியுள்ளார்கள்,தற்போது இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் 6 வருடத்திற்கு பிறகு உண்டான கதையை ஆரம்பித்துள்ளது படக்குழு.6 வருடத்திற்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளிவருகிறார் வெற்றி.தனது குழந்தையை மனைவி அபி கலைத்துவிட்டதால் வெறிபிடித்த மிருகம் போல் மாறுகிறார்.தற்போது இவர் ஜெயிலில் இருந்து வெளிவந்துள்ளார்.

வெளிவந்த வெற்றியை மீண்டும் கைது செய்ய கலெக்டர் அபி உத்தரவிடவே அவரை போலீசார் கைது செய்தனர்.இதில் கோர்ட்டில் இருந்து உடனடியாக வெளியே வருகிறார் வெற்றி,வெளியே வந்த வெற்றி அபியை பார்த்து உன் மூக்கை இப்போ உடைச்சி வெளியே வந்துட்டேன்,இதே மாதிரி உன்னையும் ஊரைவிட்டே விரட்டுறேன் என கூறி சவால் விட்டுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in