The Indian Times

சித்ரா வேலை செய்யும் பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக வரும் ஜெயிலர்… பயந்து ஒளிந்துகொள்ளும் சித்ரா.. பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.முதல் சீசன் முடிந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்து ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடிக்க உள்ளார்.கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடித்து வருகிறார்.போன சீசனில் இருந்த கண்ணம்மா இந்த சீசனில் சித்ராவாக சிறையில் இருக்கிறார்,சிறையில் இருந்து வெளியே வரவே வரும் வழியில் கண்ணம்மாவுடன் தோழியாகிறார் சித்ரா, ஆனால் சிலர் கண்ணம்மாவை கொ லை செய்துவிடவே கண்ணம்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க சித்ரா கண்ணம்மாவாக மாறி அவர் வீட்டுக்கு செல்கிறார்.

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் சித்ரா கண்ணம்மாவாக மாறி பள்ளியில் வேலை செய்கிறார் அங்கு சிறப்பு விருந்தினராக சித்ராவை ஜெயிலில் வைத்திருந்த ஜெயிலர் வருகிறார்,இந்நிலையில் அவர் கண்ணில் படாமல் சித்ரா ஒளிந்து கொள்கிறார்,இறுதியாக ஜெயிலருக்கு பரிசு ஒன்றை சித்ரா செய்துகொடுக்க,ஜெயிலர் அவரை பார்க்க வேண்டுமே என கூறவே,சித்ராவை அழைத்து வருகின்றனர்,சித்ராவை பார்ப்பாரா ஜெயிலர்,இவர் கண்ணம்மா இல்லை என்று சொல்லிடுவாரோ என அச்சத்தில் உள்ளனர் ரசிகர்கள்

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in