The Indian Times

மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே… மணப்பெண் கோலத்தில் வந்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வரலட்சுமி.கதாநாயகி,வில்லி ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் பட்டையை கிளப்புபவர்.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது நடிப்பு திறமையை வெளி காண்பித்து பலரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.அன்று முதல் இன்று வரை நடிப்பில் அதிக ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இந்த வருடம் மட்டும் படங்களை கையில் வைத்துள்ளார் வரலக்ஷ்மி.நிச்சயம் இவருக்கு இந்த 8 படமும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர் நடித்த தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தற்போது மணப்பெண் கோலத்தில் வீடியோ எடுத்து ரசிகர்களை அசத்தியுள்ளார்.இவரின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வரலட்சுமிக்கு திருமணமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.அந்தளவிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளார் வரலக்ஷ்மி.இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in