The Indian Times

CHESS OLYMPIAD நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்திய நடிகர் சிவகார்த்திகேயன் மகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர்.ரஜினிகாந்த்,கமல்ஹாசன் தளபதி விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் குரல்களை மிமிக்ரி செய்து பலர் கவனத்தினையும் ஈர்த்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் போராடி வெற்றியும் பெற்றார்.மிமிக்ரி செய்து ஆட்டத்தில் வரும் பணத்தினை வைத்து கல்லூரி கட்டணம் கட்டியதாக பல மேடைகளில் கூறியுள்ளார்.அந்தளவிற்கு கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறியுள்ளார் சிவகார்த்திகேயன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சமீபத்தில் இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடியை பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவரை தங்கள் அண்ணன் ஆகவும் அவர்களது ரோல் மாடல் ஆகவும் எடுத்துக்கொண்டு பல இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற துடிக்கின்றனர்.ஆரம்பத்தில் .ஜோடி சீசன் நிகழ்ச்சிகளை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கும் பொழுது இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பல உள்ளனர்.சிவகார்த்திகேயனின் இந்த திறமையை தெரிந்துகொண்ட விஜய் டிவி அவருக்காகவே அது இதுஎது என்ற நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தியது.இந்த நிகழ்ச்சி மாபெரும் ஹிட் அடித்தது.தனது கடின உழைப்பால் இந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் உயர்ந்துள்ளார்.

Advertisement

இவரை போல இவரது மகள் ஆராதனா பாப்பாவும் பல திறமைகளை கொண்டுள்ளார்.சிறுவயதிலேயே கனா படத்திற்காக இவர் பாடிய பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகியது.அப்பாவை போலவே இவரும் நிச்சயம் பெரிய ஆள் ஆக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆராதனா தமிழ்தாய் வாழ்த்து பாடலை பாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்

Embed video credits : cineulagam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in